
நடிகர் பப்லு மற்றும் அவருடைய காதலி ஷீத்தல் சேர்ந்து இணையத்தில் பகிர்ந்த வீடியோக்கள் வைரல் ஆகின. அதற்கு இணையதள வாசிகள் “வயசான காலத்துல உனக்கு இது தேவையா” என கேள்வி எழுப்பினர்.
அதற்கு விளக்கம் கொடுக்கிறேன் என்கிற பெயரில் பப்லு அந்த பெண்ணை கூட்டிக்கொண்டு வந்து நான் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம் என்று கூறினார்.
நான் என்னுடைய முதல் மனைவியை பிரிந்து விட்டேன். என்னுடைய முதல் மனைவிக்கு நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பது அதிர்ச்சியை தான் கொடுத்திருக்கும். என்னுடைய மகன் கூட இதைக் கேட்டு வருத்தப்பட்டான் ஆனாலும் எனக்கு என்னுடைய சந்தோஷத்தையும் பார்க்க வேண்டும். இத்தனை வருடங்களாக நான் என்னுடைய வாழ்க்கையை வீணடித்து விட்டேன் என்று பேசி இருந்தார்.
அதுபோல இந்த வயசில் உங்களுக்கு பொம்பள சோக்கு கேக்குதா என்று பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஆனால் எனக்கு கேக்குதே என்ன செய்ய..? என்னுடைய மனைவி எனக்கு தராத விஷயங்களை ஷீத்தல் எனக்கு தருகிறாள். அதனால் எனக்கு இந்த வாழ்க்கை பிடித்திருக்கிறது என்று வெளிப்படையாகவே பப்லு பேசியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் பப்லு மட்டும் ஷீத்தல் இருவருமே தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் சேர்த்து எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்திருக்கின்றனர். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்களா? என்று கேள்வி இணையத்தில் அதிகமாக எழுந்து வரும் நிலையில் இது குறித்து பல பேட்டிகளில் மழுப்பலாக பேசி வருகிறார்.
இந்த நிலையில் பப்லு உடல் தேவைக்காக மட்டும்தான் ஷீத்தலை பயன்படுத்திக் கொண்டார் என்று பிரபல பத்திரிக்கையாளான பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்திருந்தார்.
இந்நிலையில் ஷீத்தல் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் கடந்த காலத்தை நினைத்து வருந்தி கொண்டிருப்பதோ எதிர்காலத்தை நினைத்து பயப்படுவதோ வாழ்க்கை இல்லை…. வாழ்க்கை வாழ்வதற்கு தான்.. என்று கூறி இருக்கிறார்.
ஆ.இர. விஜய்சங்கர் / ஆசிரியர்

More Stories
Sts Zakłady Bukmacherskie Opinie We Recenzja Sprawdź Benefit!”
Mostbet England Pt Casino Revisão E Jogos Para Azar
Mostbet England Pt Casino Revisão E Jogos Para Azar