தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (12.6.2024) பேரவைத் துணைத் தலைவர் அவர்களின் சிறப்பு தனிச் செயலாளர் ஆதிகேசன் – திருமதி. சாந்தி தம்பதியரின் மகள் டாக்டர். பத்மாசினி, செந்தில் குமார் – திருமதி. சாந்தி தம்பதியரின் மகன் டாக்டர். கௌரிசங்கர் ஆகியோரது திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு. கு.பிச்சாண்டி, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப.ரங்கநாதன் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் உள்ளனர்.

More Stories
Проблемы с входом в личный кабинет Pinco: какие есть способы устранения?
Boni verstehen: Welche Boni erwarten Sie bei Sportwetten ohne Oasis?
Mostbet Casino: Beynəlxalq İstifadəçilər Üçün Mərkəz