
பண்ருட்டி.ஜுலை.19. கடலூர் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியம் பூங்குணம் அரசு உயர்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது. பண்ருட்டி ஓன்றிய குழு பெருந்தலைவர் சபா. பாலமுருகன் கலந்து கொண்டு பொது மக்களிடம் இருந்து அனைத்து துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை பெற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பண்ருட்டி வட்டாட்சியர் ஆனந்தன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரிஹர சுப்பிரமணியன், செந்தில், பண்ருட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், சக்தி, பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநர் பார்த்தசாரதி, பொறியாளர் ஜெயச்சந்திரன், பூங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி வெங்கடேசன், எல் என். புரம். ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி செல்வமணி, ஒன்றிய கவுன்சிலர்கள் அருள் பிரகாஷ், செல்வம், மகளிர் சுய உதவிக் குழு பயிற்றுநர் கெளரி பாபு, திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ் குமார், இளையராஜா, நாகராஜ்,ராமு, செல்வம், சுரேஷ், பாபு, மேகநாதன், கேபிள் சக்தி, கிருஷ்ண மூர்த்தி, சத்யராஜ் மற்றும்
பண்ருட்டி ஊராட்சிகளை சார்ந்த அலுவலர்கள் , தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்



More Stories
Sts Zakłady Bukmacherskie Opinie We Recenzja Sprawdź Benefit!”
Mostbet England Pt Casino Revisão E Jogos Para Azar
Mostbet England Pt Casino Revisão E Jogos Para Azar