சிங்கம்புணரியில் புது மாப்பிள்ளை மர்ம சாவு.

சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்ட நிலையைம் பகுதியைச் சேர்ந்தவர் மணி இவருடைய மகன் கார்த்தி (வயது 29 )வெளிநாட்டில் பணிபுரிந்த இவர் சொந்த ஊருக்கு வந்து வேலை பார்த்து உள்ளார் இவருக்கு கடந்த 4 மாதத்திற்கு முன்பு தான் ராணி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது இந்த நிலையில் நேற்று கார்த்தி நண்பரை சாந்தித்து விட்டுநாட்டார்மங்கலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் அப்போது சாந்தினிபட்டி அருகே சாலையோரம் மர்மமான முறையில் கார்த்தி இறந்து கிடந்தார் இதுகுறித்து அங்கிருந்தவர்கள் எஸ் எஸ் கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் அதன் பேரில் போலீசார் கார்த்தியின் உடலை மீட்டு சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? வேறு ஏதேனும் வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா ?என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இதற்கிடையே அவரது உறவினர்கள் கார்த்தி சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளனர் இது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
முத்துப்பாண்டி, செய்தியாளர் அதிரடி சட்டம்
More Stories
சாத்தனூரில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவர்கள் அதிரடி கைது
சொத்து தகராறுகளைத் தவிர்ப்பது எப்படி
செங்கத்தில் மாமனாரே மருமகனை கொலை முயற்சியால் பரபரப்பு. மாமனார் மற்றும் அவரது மகன் இருவர் கைது