June 26, 2025

பூங்குணம் கிராம ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

பண்ருட்டி.ஜுன்.17. கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் பூங்குணம் கிராம மேற்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு மேல் நான்காம் கால யாக பூஜைகள், பிம்ப சுத்தி, ரக்ஷாபந்தனம், நாடி சந்தனம், தத்துவார்ச்சனை, ஸ்பர்ஸாஹூதி, திரவியாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, யாத்ராதானம் என பல்வேறு வகையான பூஜைகள் நடைபெற்று யாகசாலையில் இருந்து கடம் புறப்படாகி விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சித்தி விநாயகருக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. பூங்குணம் கிராம முக்கிய பிரமுகர்கள், சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.