நத்தம்,மே.24:
நத்தம் அருகே வேம்பரளி காவல் சோதனைச்சாவடி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மதுரைச் சாலையில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காவல் சோதனச்சாவடி வேம்பரளியில் செயல்பட்டு வருகிறது. இந்த சோதனைச்சாவடியை நவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டதைடுத்து அவற்றை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது நத்தம் காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி, உதவி ஆய்வாளர் விஜயபாண்டியன் உள்ளிட்ட போலீஸார் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட காவல் துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.
Dr. A.R.Vijayashankar/Editor

More Stories
Какова политика конфиденциальности и безопасность игры в Pinco?
Олимп Казино Казахстан Официальный Сайт Olimp Casino Kz
Пользовательский опыт на онлайн-платформе Mostbet: навигация по Betting-платформе