பண்ருட்டியில் வழக்கறிஞர் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததால்
பரபரப்பு ! கடலூர் மாவட்டம் பண்ருட்டி மணிநகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சரவணன் இவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் சரவணன் கடலூர் சாலையில் தனது அலுவலகம் ஒன்றை செயல்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் அவர் இன்று காலை வழக்கம் போல் நீதிமன்றத்தை செல்வதற்கு வீட்டில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டவர்.
அலுவலகத்திற்கு முன்பாக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அலுவலகத்திற்கு சென்ற பின் சாலை சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் சாலை கடந்து வந்த கொங்கரி மூக்கன் பாம்பு ஒன்று திடீரென சாலையை கடந்து வந்த அவரது இருசக்கர மோட்டார் வாகனத்தில் முன் புறத்தில் புகுந்துள்ளது.

இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரிடம் தெரிவித்தனர் இதனை அறிந்த அவர் உடனடியாக பண்ருட்டி தீயணைப்பு அலுவலகத்திற்கு தனது வாகனத்தை நண்பருடன் எடுத்துச் சென்று நடந்த விஷயத்தை தீயணைப்பு துறையினரிடம் தெரிவித்தார்.

இதனை அடுத்து அவர்கள் ஆய்வு செய்ததில் காணவில்லை எனவே வாகனத்தை பிரித்து தான் பார்க்க வேண்டும் என கூறி கை விரித்த நிலையில் கடலூரில் உள்ள பாம்பு பிடி ஆர்வலர் தகவல் கொடுத்ததை அடுத்து அங்கிருந்து வந்த அவர் பாம்பினை லாபகமாக பிடித்தார் வாகனத்தில் புகுந்த பாம்பை பிடித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுகிறது.
முருகாணந்தம்
மக்கள் குத்து செய்தியாளர்
கடலூர்

More Stories
Steps to build a powerful profile on Filipino dating apps
Indonesian dating apps vs Indonesian dating sites: which performs better?
Exploring Legit Sugar Daddy Apps That Send Money