புவனகிரி அரசு பெண்கள் பள்ளியில் ஆசிரியர் காலி பணி இடங்களை நிரப்ப தமிழ்நாடு ஆதிக்குடிகள் ஐக்கிய பேரவை கோரிக்கை

கடலூர் மாவட்டம் புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியானது தொடர்ந்து நல்ல தேர்ச்சி விகிதத்தை பெற்று வருகிறது
2019-ல் கடலூர் மாவட்டத்தில் சிறந்த பள்ளிகளில் புவனகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இடம்பெற்று அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி என தரம் உயர்த்தி பெயர் மாற்றப்பட்டது. எல்.கே.ஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள சிறந்த பள்ளி ஆகும்.
2019 முதல்2021 வரையிலும் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை 300க்கும் மேற்பட்ட மாணவர் சேர்க்கை நடைபெற்றது.. தற்போது மிக குறைந்த அளவே மாணவர் சேர்க்கையானது உள்ளது அதற்கு காரணம் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர் இல்லாமையே எனவே மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாணவ மாணவிகளின் எதிர்கால கல்வியை கருத்தில் கொண்டு மிக விரைவில் நிரந்தர ஆசிரியர் மற்றும் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யுமாறு தமிழ்நாடு ஆதி குடிகள் ஐக்கிய பேரவை சார்பில் அதன் நிறுவனர் தலைவரும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்பு குழு உறுப்பினர் இரா.ரகுவசந்தன் கோரிக்கை வைத்துள்ளார்,

More Stories
Johnny Kash Casino Review for Australian Players
Boho Casino Game Review: A Vibrant Experience for Australian Players
class 777: A New Era in Online Casino Entertainment