காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா அழைப்பிதழ்களை புதுச்சேரி கவர்னர் மற்றும் முதல்வர் பெற்றுக்கொண்டனர், கோயில் நிர்வாகி காளிதாஸ் வழங்கினார் காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனி திருவிழா வருகின்ற 19-ஆம் தேதி இரவு மாப்பிள்ளை அழைப்புடன் விமரிசையாக தொடங்க உள்ளது.

இந்நிலையில் நேற்று மாங்கனி திருவிழாவிற்கான அழைப்பிதழ்களை

மேதகு துணைநிலை ஆளுநர் திரு.சி.பி. ராதாகிருஷ்ணன், மாண்புமிகு முதலமைச்சர் N.ரங்கசாமி, மாண்புமிகு சபாநாயகர் திரு. செல்வம், மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாண்புமிகு மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் அரசு அதிகாரிகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் தனி அதிகாரி திரு. காளிதாஸ் மற்றும் கோயில் குருக்கள் தலைமையில் அழைப்பிதழ்கள் நேரில் முறைப்படி வழங்கப்பட்டன.
ஆ.இர.விஜயஷங்கர்
ஆசிரியர் - போர்முனை
More Stories
Casibom Güncel En Yeni Giriş Adresi 2024