
வழக்குகள் தாமதமாவதை தடுக்கநீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் பேச்சு
சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது துணை சபாநாயகரும்.கீழ் பெண்ணாத்தூர் எம்எல்ஏ(திமுக) கு.பிச்சாண்டி பேசுகையில், கீழ்ப்பெண்ணாத்தூரிலே நீதிமன்றம் திறப்பதற்கு ஆவன செய்யப்படுமா? நீதிபதிகள் இல்லாமல் பல வழக்குகள் தாமதமாகிறது. நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆவன செய்யுமா என்றார்.
இதற்கு பதில் அளித்து சட்டத் துறை அமைச் சர் எஸ்.ரகுபதி பேசுகையில், நீதிபதிகளினுடைய பணியிடங்களை நிரப்புவதற்கு உயர் நீதிமன்றத் தினுடைய ஆலோசனையின்படி உரிய நடவடிக் கைகள் எடுத்து பல பணியிடங்கள் பூர்த்தி செய் யப்பட்டுள்ளன. கீழ்பெண்ணாத்தூரிலே எவ்வளவு விரைவில் நீதிமன்றம் கொண்டுவர முடியுமோ, அதைக் கொண்டு வருவதற்கு அரசு உரிய நடவ டிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்ளும்’ என்றார்.
சரவணன்
செய்தியாளர் திருவண்ணாமலை
போர்முனை

More Stories
Steps to build a powerful profile on Filipino dating apps
Indonesian dating apps vs Indonesian dating sites: which performs better?
Exploring Legit Sugar Daddy Apps That Send Money