June 20, 2025

முதல்வரின் காலை உணவு திட்டத்தின் படி செங்கம் எம்எல்ஏ மு.பெ. கிரி மாணவர்களுக்கு உணவு வழங்கினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க,
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் ஊரகப் பகுதிகளில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவு_வழங்கும் திட்டத்தினைசெங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஒன்றியம், தானிப்பாடி ஊராட்சியில் உள்ள கிருஸ்த்துஜோதி மேல்நிலைப்பள்ளியில் 1வகுப்பில் இருந்து 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி.MLA அவர்கள் காலை உணவுகள் வழங்கி தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்வில், ஒன்றிய கழக செயலாளர் மு.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் அ.தண்டபாணி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொன் தனுசு, ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், மாவட்ட கவுன்சிலர் வ.முத்துமாறன், ஒன்றிய துணை செயலாளர் ஜெ.குமார், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பி.வசந்த், ரகுபதி, வில்லியம்ஸ், ஜீ.நீலகண்டன், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் அருண்குமார் 
போர்முனை
தண்டராம்பட்டு