June 21, 2025

மேல்பட்டாம்பாக்கத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தொடக்கம்

கடலூர். ஜுலை.15. கடலூர் மாவட்டம் அண்ணாகிராம ஒன்றியம் மேல்பட்டாம்பாக்கம் டி. எம். துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் & தலைமை செயற்குழு உறுப்பினர் வி.கே.வெங்கட்ராமன் அவர்கள் துவக்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு உணவு அளித்தார். தலைமை ஆசிரியர் பிரின்ஸ் ஜெய் வீணா, ஒன்றிய கவுன்சிலர் அருள்
செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முருகானந்தம்
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்