June 26, 2025

மருங்கூரில் அகழாய்வு பணிகளை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் துவக்கி வைத்தார்

கடலூர்.ஜீன்.19. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வாயிலாக 2024 ஆம் ஆண்டுக்கான அகழாய்வு பணிகள் கீழடி. வெம்பக்கோட்டை .திருமலாபுரம். பொற்பனைக்கோட்டை. கொங்கல்நகரம். சொன்னானுர் .கீழ்நமண்டி. கடலூர் மாவட்டம் மருங்கூர் உள்ளிட்ட எட்டு இடங்களில் அகழாய்வு பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.
கடலூர் மாவட்டம் மருங்கூரில் முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் பணிகள் தொடங்கப்பட்டன.

முருகானந்தம் 
செய்தியாளர் மக்கள் குத்து
கடலூர்