புதுடெல்லி:

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி 293 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. இதையடுத்து நேற்று 3வது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்வு பதவி பிரமாணம் செய்து வைத்தார். மோடியுடன் 71 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.
மோடி பிரதமராக பதவி ஏற்ற நிலையில் இன்று காலை தனது அலுவலகத்திற்கு சென்றார். அங்கு முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட மோடி, தனது முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் கோப்பில் கையெழுத்திட்டார்.
அதாவது நாடு முழுவதும் உள்ள 9.3 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் 20 ஆயிரம் கோடி வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.
ஆ.இர. விஜயய்ஷங்கர்/ஆசிரியர்
More Stories
Casibom Güncel En Yeni Giriş Adresi 2024